போடா பச்சிலை புடிங்கி

போடா பச்சிலை புடிங்கி

Tuesday, March 16, 2010

தேறாத விளையாட்டு பிள்ளை




இந்த படம் 100 நாட்கள் ஓடும் , சன் தொலைக்காட்சி இடைவேளைகளில் மட்டும்.

சுருட்டை முடி, 4 நாள் வழிக்காத தாடி, அழுக்கு பையன் லுக் இது போதுமா பிளேபாய் தோற்றம் கொண்டு வர. விஷாலை பார்க்க முடியல.... அவருக்கு ஏத்த படம், ஒரு ஊருல இருந்து இன்னோரு ஊருக்கு போய் ஒரண்ட இழுக்குறதுதான். அத விட்டுட்டு பெஸ்டு ஃபிகர தேர்ந்தெடுக்க நம்மல படுத்தி எடுக்காப்ல. தியேட்டருல ஒரு நாதாரி விஷால் ரசிகன் கேனத்தனமான வசனத்துக்கு விசில் அடித்தான், பலரும் அவனை பாவமாக பார்த்தனர்.
வழக்கம் போல 3 நண்பர்கள் கதாநாயகனுக்கு. 3 ஃபிகர தேர்ந்தெடுத்து அதுல பெஸ்டு டாவை கல்யாணம் பண்றதுதான் அவரது உயர்ந்த லட்சியம், இதுக்கு உயிர் கொடுத்து உதவ 3 கோமாளி நண்பர்கள். தியேட்டருல உக்கார முடில, போதுவா பாடல்கள்தான் தாலாட்டும், இங்க முழு படமும் தாலாட்டுது. அதுவும் படத்துல விஷால் ஏதாவது சாதிச்சுட்டு திரையில் ரொம்ப கிளோஸா வந்து மூஞ்சிய ஒரு மாதிரியா வச்சுகிட்டு சபாஷ்னு நெஞ்ச தட்டும் போது ரொம்ப கேவலமா இருக்கு. நாயகிகள் அவங்களால முடிஞ்ச அளவுக்கு தங்கள் 'திறமையை' காட்டிட்டு போதுங்க.

ஒரு திருட்டு விசிடி விற்கும் நபர் இந்த படத்தயாரிப்பாளருக்கு போன் போட்டு காட்டு கத்தல் கத்திருக்காரு, " இப்டி படம் எடுத்தா ஒருத்தனும் சி.டி. வாங்க மாட்றான், எங்க பொழப்பு என்னாறதுனு".

மொத்தத்தில் தீராத விளையாட்டு பிள்ளை - - தேறாத விளையாட்டு பிள்ளை

Friday, March 12, 2010

" ஜாக்கிங் - வாக்கிங் "



இன்று பெரு நகரங்களில் மட்டுமல்ல சிறு டவுன்களிலும் அதிகாலையில் நாம் காணக்கூடிய காட்சி " ஜாக்கிங் - வாக்கிங் ". இது கடந்த 10 வருடங்களில் தான் அதிக மக்கள் தங்கள் உடம்பை இளைக்க ஓடுகிறார்கள். மேல்தட்டு- நடுத்தட்டு -மேல்நடுத்தட்டு மக்கள் தான் தங்கள் பருமன் குறைய முற்படுகின்றனர். ஏனேன்றால், இவர்களுக்கு உடல் உழைப்பு என்பது மிகவும் அரிதாகி போய்விட்டது. நாளை காலை நீங்கள் வாக்கிங் போக ஆரம்பிக்காவிட்டால் நாளை மறுநாள் செத்து போவீங்க என மருத்துவர் சென்னதும் தான் இந்த வாக்கிங் யோசனை வரும் 50 வயதை தாண்டியவர்களுக்கு.ஐ.டி. துறையினர் உட்காந்த நிலையிலேயே வேலை செய்வதால் உடல் நிலைகுலைந்து போயுள்ளனர். புதிதாய் வாங்கிய கால் டவுசர் தொடைக்கு மேல் ஏற மறுப்பதால் கடுப்பாகி காலை ஜாகிங்கிற்கு செல்கின்றனர். 45 வயதை கடந்த நபர்கள் தங்கள் உடலில் மெதுவாய் சர்க்கரை , முதுகு வலி போன்ற அறிகுறிகள் வந்ததும் அலாரம் வைத்து வாக்கிங் கிளம்புகின்றனர். வீட்டிற்கு அருகில் உள்ள மைதானங்கள், ரயில் நிலைய பிளாட்பாரம் இவர்களுக்கு உதவும். மேல்தட்டு மக்களுக்கு ரேசனில் சர்க்கரை இருக்காது ஆனால் உடலில் நிறைய இருக்கும், இவர்கள் அரிதாகவே மைதானத்துக்கு வருகின்றனர், தங்கள் ஏரியா ஜிம்மில் மாதம் ஒரு வலுவான தொகையை கட்டி சேர்ந்து, குளு குளு அறையில் தானியங்கி இயந்தரத்தில் ஓடுகின்றனர். அதிலும் ஜிம்மிற்கு காரில் மனைவி சகிதம் வருவர், ஒரு சின்ன மத்தளம் போல உள்ள பை, அதில் பாட்டில் தண்ணீர், சின்ன டர்க்கி டவல் இருக்கும்.

மைதானத்தில் வாக்கிங் போவது சில நடுத்தர பெருசுக்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். தங்கள் வயதுடைய ஆட்களை பழக்கம் பிடித்து " வாக் & டாக் " செய்வார்கள். அதிலும் பெண்கள் கூடி பேச நல்ல வாய்ப்பு அமையும். ஆக இதற்காவே தினமும் ஆஜராவார்கள்.
வாலிபர்கள் காதில் பாட்டு கேட்டபடி ஹீரோ - ஆன்ட்டி ஹீரோ ஆவத்ற்காக தினமும் ஜாகிங்கை வழக்கபடுத்துவர். எல்லாம் சரி, இதுவரை யாரும் கீழ்த்தட்டு மக்கள் வாக்கிங் - ஜாக்கிங் செல்வதை காணமுடியாது. அவர்களுக்கு இயற்கையாகவே கழுத்தில் இருந்து வயிறு வரை சிக்ஸ் பேக் இருக்கும்.

நானும் ஜாகிங் ஆரம்பித்தேன், தினமும் அதிகாலை பக்கதில் உள்ள ரயில்நிலைய இடத்தில் ஓடுவேன், அப்போது நான் கண்டது, உழைக்கும் மக்கள் அலாரமில்லாமல் எழுந்து தண்டவாளங்கள் பக்கம் வாலியுடன் (கவிஞரில்லை) ஆய்க்கு செல்கின்றனர். ஆனால் நாம் தொப்பையை தடவியபடி ஓடுகிறாம்.

" உடலினை உறுதி செய் "

Thursday, March 11, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - ராஸ்கல் தியேட்டருக்கு வருவாயா !!??




காதலர்களுக்கு ஏற்ற படம்.... புது பரிமாணத்தில் விரல் வித்தைக்காரன் சிம்பு. சில இடங்களில் மட்டும் அழகாக திரிஷா. சிம்பு பி.இ. முடித்துவிட்டு படத்தின் டைரக்டரை போல சினிமா மோகத்தில் மிதக்கிறார். திரிஷாவை பார்த்ததும் காதல் பீறிடுகிறது... சொல்லப்பட்ட வசனம் " காதல்னா தூக்கி அடிக்கனும் குப்புற கவுத்தனும் தலையில கொட்டனும் "
திரிஷா சேலையில் நடந்து வருவது சின்ன புள்ளைங்க ஆய் வரும் போது ஒருமாதிரியா நடக்குங்க அது போல இருக்கு. வலது கால் அவருக்கு சைடு வாங்குது (என்ன பிரச்சனையோ). திரிஷா கேரக்டர் இந்த காலத்து இளம் பெண்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காதலும் செய்கிறார், அப்பா திட்டுவார் ஃபிரண்ட்ஸா இருப்போம்னு சொல்லி காதலனை மண்டை காயவைகிறார். மனதையும் மற்றதையும் வருடும் பாடல்கள் தி கிரேட் ரஹ்மான். நாயகன் நண்பராக படத்தின் தயாரிப்பாளர் சிறப்பாக காமெடி பண்ணியிருக்கார். கேரளா கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்டப்பட்டுள்ளது (கேரளானாலே குளிர்ச்சிதானே). சர்ச்சில் த்ரிஷா கல்யாணத்தை நிறுத்திய அன்றிரவே சிம்பு அவள் வீட்டிற்கு போய் கைய புடிக்குறாரு, வா ஓடி போகலாம்னு கெஞ்சுறாரு, இவ்வளோ பிரச்சனை நடந்திருக்கு வீட்டில் ஆனால் அவர்கள் சாவகாசமாய் கொஞ்சுறாங்க... த்ரிஷா அப்பா அம்மா எல்லோரும் அன்றிரவு இரண்டாம் ஆட்டத்துக்கு போயிட்டாங்க போல !!

கிளைமேக்ஸ் கொஞ்சம் புதுசுதான் , எதிர்பாராத திருப்புமுனைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ளது.

மொத்தத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா - ராஸ்கல் தியேட்டருக்கு வருவாயா !!??

Wednesday, January 27, 2010

ஆசிரியர்களும் சண்டைக்காட்சிகளும்


நான் பள்ளி படிப்பை சிங்கம் மெட்ரிக் பள்ளியில் முடித்தேன். எனக்கும் அசிரியர்களுக்கும் உள்ள உறவை இங்கு உறிக்குறேன்.
முதலில் உள்ளூர் ஃபேமஸ் ஹலோமீனா மிஸ்ஸின் அறிமுகம், ஊரில் உள்ள சில முக்கிய பள்ளிகளில் மாறி மாறி பணி புரிந்தவர். இவரை கண்டால் மாணவ உலகம் கதறும். இதுபோல் ஒரு அடியை தன் வாழ்நாளில் யாரும் வாங்கியிருக்க முடியாது. மாட்டை அடிக்கும் பிரம்பை வைத்து அடி நையபுடைக்கும் ஹலோமீனா. விவாகரத்தான கிருஸ்துவ லேடி, மனதிற்குள் மனிதர்களை வெறுக்கும் ஹிஸ்டரி மிஸ்தான் நம்ம ஹலோமீனா. சிறு தவறு செய்தவன் கூட பயத்தில் மூத்திரம் பெய்திடுவான். மாணவிகளுக்கும் செம அடி விழும், தலைமயிறை பிடித்து கரும்பலகை நோக்கி ஒரு தள்ளு தள்ளும்.என்னை இவரிடம் டிவீசன் சேர்த்துவிட்டார்கள்... தினமும் உயிரை கையில் பிடித்து செல்வேன்.
அடுத்தது சுஜையா மிஸ், ஆங்கில ஆண்டி, சிங்க பள்ளிக்கு அடிக்கல் நாட்டியதிலுருந்து இன்று வரை அதே பள்ளியில் ஆங்கிலத்தை ஆத்திகொண்டிருக்கிறார்.ஆங்கிலத்தில் பேசாவிட்டால் 1 ரூபாய் அபதாரம், நானும் சில நண்பர்களும் வாயை மூடிக்கொண்டு பேந்த பேந்த உட்காந்திருப்போம்..ம்ம்ம் ஒரு வார்தைகூட பேச மாட்டோம்.
நேக்ஸ்டு குரவணராஜன் பயாலஜி சாரு.... நிஜமாவே எங்களுக்கு "பயா"லஜிதான் அவரு.
என்றாசா படிக்கலியா??னு சொல்லி சொல்லி ஜவுளிதுணி கம்பேடுத்து தேவர்மகன் கமல் போல அடித்து ஆடுவார்.அவரு அடிச்சா டவுசரில் இருக்கும் தூசு பறக்கும், ஒருமுறை தாஜாகுமாரின் பின்பக்கத்தில் அடித்ததில் தூசு பறந்து அருகிலிருந்த மாணவிகள் கண்களில் விழுந்தது. இவருட்ட அடி வாங்குனா டவுசர 4 மாசத்துக்கு துவைக்க வேணாம்.(சமயத்தில் டவுசர் கிழியவும் வாய்ப்புண்டு).
ஆடுத்தது செளந்தர்ராஜன் - கணிதப்புலி - செண்டிமண்ட் எலி... கணிதத்துல 4 மார்க் வாங்குன நாங்க மார்க் வாக் மாதிரி தெம்பா இருப்போம் இவரு சேரன் மாதிரி குலுங்கி குலுங்கி அழுவாரு... ஸ்கூல் மேட்ச் பாத்துட்டு தாமதமா வகுப்புக்கு வந்தா அழுதுகிட்டே 'நிங்க உருப்படவே மாட்டீங்கனு'சாபமிடுவார்.

அடுத்தாப்ல கணிதச்சிங்கம் முகநாதன், டேய் புடையங்கண்ணா இதான் இவரோட ஃபேமஸ் டயலாக், ஆனா இவரோட பல்லி ஒருமாதிரியா வெடிச்சு சேதறியிருக்கும். நான் அவரோட வகுப்பு இல்லைனாலும் தேடி வந்து மார்க் கேட்டு அடிச்சுட்டு போவாப்ல, ரொம்ப நல்ல டைப்பு. இவரிடம் டிவீசன் போன அடிவிழுகாது, போகலைனா தூக்கி போட்டு அடிப்பாப்டி.
ஒருதடவ சொத்து நாராயணன் என்ற டிவீசன் பொகாத மாணவன கூப்பிட்டு உடம்பு எப்டி இருக்குனு கேட்டாரு, அவனும் சாருக்குதான் நம்ம மேல எவ்வளோ பாசம்னு நம்பி உடம்பு நல்லாயிருக்கு சார்னு சொல்லிட்டான்,... சவுக்கியாமானு கேட்ட வடிவேலுவ கவுண்டமணி தூக்கி போட்டு மிதிப்பாரே அது போல செம அடி, கொஞ்ச நாளைக்கு அவன் சவுக்கியாமாக இல்லை.இருந்து அவரிடம் டிவீசன் போகாத மாவீரனவன்.

அடுத்து பிசிக்ஸ் சார் சங்கடேஸன், சற்றே வழுக்கை, வாலிபால் வீரர் நெடு நெடு உசரம்.
மிகுந்த நகைச்சுவை உணர்வுள்ளவர். இவரு டிவீசன் வராத மாணவர்களிடம் வாலிபால் மேட்ச் ஆடுவார்.குனிய விட்டு முதுகில் அடித்தால் அடுத்த 5 நிமிடத்துக்கு சரியா மூச்சு விடமுடியாது. ஸ்கூல் லேபில் வச்சே தம்மடிப்பார். ஆனா இவரிடம் டிவீசன் சேர்ந்துவிட்டால் ரொம்ப நல்லவராயிடுவாரு.

அடுத்து வருவது கெமிஸ்திரி சாரு திருவாளர். ஜாரிமுத்து, நல்ல டைப்பு ஆசாமி. ரொம்ப குள்ளமானவரு. இவரு இனிஸியல் C, அனவரும் இவரை CMனு கூப்பிடுவாங்க. நாங்க செண்டிமீட்டர்னு கலாய்ப்போம். லேபில் இருக்கும் போது இவர பாத்தா டேஸ்ட் டியூபில் துணி சுத்தியது போல நடந்து வருவாரு.

லாஸ்ட் ப்ட்நாட் லீஸ்ட் திரு.சதிரேசன், ஹிஸ்டரி சாரு. மாபெரும் காமடியன். 47க்கு முன்னாடி பிறந்திருந்தா இவரு ஒருத்தரே போதும் வெள்ளைகாரன் கோர்ட்ட காணும் டைய காணும்னு ஓடிருப்பானுங்க, சும்மா முரட்டுத்தனமா இங்கிலிஸுல பேசுவாரு சாரி கர்ஜிப்பாரு.
சில உதாரணங்கள்,
close the book put the bag
Go and punish the principal
your life going down like Kuttraalam falls
Madam this boy affect the stomach.
Heyyy srikannan jumping like monkey from 1 desk to 1
Once we asked a doubt to him about Inverted Lotus, அவரு சொன்னாரு அது வந்துப்பா கவர்ந்திழுக்குற லோட்டஸ்னு.
நல்லா நாக்க மடிச்சுகிட்டு கண்ண துறுத்திக்கிட்டு கடிமையா கொட்டுவாரு. சைக்கிள எடுத்துகிட்டு வீடு வீடா போய் டிவீசனுக்கு ஆள் புடிச்சாரு. அவருக்கு அழகான மனைவி, இருந்து மச்சினிய லைட்டா கொஞ்சுவாரு. எங்க மூனு பேர் பேரும் குமார்னு முடியும் எங்களை ரோட்டுல எங்க பாத்தாலும் ஹய்ய்ய்ய் திரி குமார்ஸ் வேர் கோயிங்னு பிளிறுவாரு.

இதுபோக விளையாட்டு சாரு திரு கூஜாராம்னு ஒருத்தரு சுத்திகிட்டு இருந்தாரு. மனசுக்குள் மன்மதன்னு நினைப்பு. சில கசமுசா அவரையும் சில மாணவிகளைப் பத்தியும் உலா வந்தது.

பிங்குறிப்பு:- அனைத்து பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன, இன்னும் பல நகைச்சுவை சம்பவங்கள் உள்ளது, அது இனி தொடரும்.. வரும் பதிவுகளில்.

Tuesday, December 15, 2009

நண்பனுக்கு நான் எழுதிய பிறந்தநாள் வாழ்த்து மடல்

இனிய நண்பனுக்கு,
திரைகடேலாடி திரவியம் தேட சென்றாய்,
சிறப்பாகேவ தேடுகிறாய் , அதற்கு கொடுக்கும் விலை
பெற்றோர் உடன் பிறந்தோர் நண்பர் கூட்டத்தின் முகம்
இவைதான் ….. தொழில்நுட்ப வளர்ச்சியால் செல்பேசுகிறோம்
வீடியோ சாட் மூலம் மந்தமாய் சொந்தபந்தங்கைள
பார்க்கிறோம்.
கடைசியாய் வீட்டில் பால்பாயாசம் கிண்டி ,
புத்தாடையுடுத்தி கிழவி காலில் ஆசிர்வாதம் வாங்கி
கொண்டாடிய பிறந்தநாள் எப்போ என ஞாயாபகமிருக்கா??
கடைசியாய் ஊர் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி ,
மாலையில் உற்சாகபான விருந்து தந்து
கொண்டாடிய பிறந்தநாள் எப்போ என
ஞாயாபகமிருக்கா??.......................
இவையைனத்தும் நாம் வாழ்வில் வெற்றிபெற இழக்கும்
உன்னதங்கள்... ஊர்திரும்பும் நாளில் நாம் அடையும் சந்தோசம் ,
பூரிப்பு வாழ்நாளில் இதுவைர அடைந்திராதது. . மதுரைய
தாண்டியதும் " எங்க ஊர் வந்திடுச்சுடா " என மனம் நினைக்கும்.
கல்லுபட்டி வந்ததும் ஊரில் முன்னேம வந்திறங்கியிருக்கும்
நண்பனுக்கு போன் செய்து டேய் நா கல்லுபட்டிய தாண்டியாச்சு
என தகவல் அளிப்பதும், கிருஷ்ணன் கோவில் தாண்டியதும்
உடம்பில் ஓர் இனம் புரியாத சிலிர்ப்பு சில்லிடும்.
பஸ்நிலையத்திலிருந்து வீடு போவதற்குள் எட்டு பேரிடம் "
ஆமங்க... இப்பதான் வந்தேன். ஆமா அங்க ரொம்ப வெயில்
ஜாஸ்த்தி " போன்ற பதிலளிக்க நேரிடும், இது ஒரு சுகஇம்சை.
வீடு வந்து பெற்றோரை கண்டதும் கண்டிப்பாக கண்ணில் நீர்
சுரக்கும், ஆனால் நண்பர்களை கண்டதும் ஒரு இனம் புரியாத
குதூகலமும் , சிரிப்புமாய் இருக்கும்.
நாம் எவ்வளவுதான் குண்டாக இருந்தாலும் அம்மா கேட்பது
' என்னடா கொஞ்சம் மெலிஞ்சமாதிரி இருக்க?? " உடேன அப்பா.”
ஏன்டா அங்க என்.வி கிடைக்காதா??" என்பார்.
" பிரிந்து கிடந்த வலிக்கு இதேல்லாம்தான் சுகவைத்தியம் "
தொலைவிலிருக்கும் நண்பனுக்கு எனது இனிய மனமார்ந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் வாழ்க - கூடிய விரைவில் இந்தியாவில்
வந்து வாழ்க !!

விஜய்க்கு இது 49வது படம், பிரபுதேவாவிற்கு கடைசி படம்.

வில்லு :-

விஜய்க்கு இது 49வது படம், பிரபுதேவாவிற்கு கடைசி படம்.


போக்கிரி படத்திற்கும் வில்லுவிற்கும் ஒரே வித்தியாசம் , அந்த படம் பெயர் போக்கிரி, இது வில்லு.எடுத்ததும் சண்டை (போடா...) உடனே பாட்டு.... முதல் பாதி (போடா...) வடிவேலு தயவில் ஓடுது...நயன்தாரா படம் முழுக்க தனது " திறமையை " காட்டி மகிழ்விக்கிறார். அவர் 8 பேக் வைத்துள்ளார் (வவுத்துல 6). காணாமல் போன ஆனந்தராசு, srimaan , வையாபுரி இதுல வந்து போறாங்க.

ஒரு பாட்டில் " பீமங்கிட்ட கதய கேட்டேன்" என வரும்.... இவரு பிரபுதேவாட்ட ஒழுங்கா கதைய கேட்டிருக்கலாம்.!!

இது வரை ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த அனைத்து நபர்களும் விஜய்யிடம் "மூத்திரத்த வாங்கி குடிக்கலாம்". விஜய் விமானத்தில் ஃபுட்போடு அடிக்கிறாப்ல.. (அதுக்கு நம்மல செருப்பால நாலு அடி அடிச்சிருக்கலாம்).இடைவேளைக்கு முன், பின்சீட்டில் ஒரு அப்பாவி கேட்டார் " படம் எப்ப போடுவாங்க" ?

இரண்டாம் பாதி மிக கொடுமை....

டைடில் போடும் போது ஒரு உச்சகட்ட கொடுமை... விஜய் ரசிகர் மன்ற
கொடியை காண்பித்து மக்களுக்கு பீதியை கிளப்பினார் சந்திரசேகர் எனப்படும் மனநோயாளி.
எல்லாமே குத்துப்பாட்டு... " இந்தா வாங்கிக்கங்கடா " என விஜய் பொளந்து கட்டுறாப்ல.!!

அவனவன் உசிர கொடுத்து படம் எடுக்குறாய்ங்க.... விஜய் படம் எடுத்து உசிர எடுக்குறாப்டி !!


ஒரே வரில சொன்னா " விஜய் திருந்தவே மாட்டாப்ல " --- நாம தான் அவரு படம் ஓடுற தெருபக்கம்கூட போவகூடாது. மிக சாக்குறதையா இருக்கோனும் !!!!!!!


பி.கு:- படம் முடிஞ்சு வந்ததும் கடுப்புல எழுதினது.

நடிகர்கள்

எனக்கு தெரிந்தவரையில் இணையதளத்தில் அஜித்குமாருக்குத்தான் நிறைய விசிறிகள்.
ஆனால் உன்மை நிலவரம் என்னானு தெரில.... ஒரு விஜய் படம் வெளிவந்தா அது குறைந்தபட்ச்சம் அவரது ரசிகர்களையாவது திருப்திபடுத்தும். விஜய் படம் ஓடும் அரங்கில் சென்று பார்த்தால் தெரியும், குறைந்தது 1 வாரத்திற்காவது திருவிழா கோலத்துடனிருக்கும்.
சில அஜித்குமாரு படத்தை அவரது ரசிகர்கள் கூட இரண்டாவது முறை போக தயங்குவதை பார்த்திருக்கிறேன், உதாரணம்:- ஆஞ்சனேயா, ரெட், ராஜா, ஏகன், திருப்பதி, ஆழ்வார் (இந்த படப் பெயர் மறந்து போய் கூகுலில் தேடினேன்), பரமசிவன். அஜித்குமாருக்கு அமூல் பேபி முகம், குரலும் மிக மென்மையா இருக்கும். இதவச்சுகிட்டு அவரு தூங்கி எழுந்த கண்களுடன் வந்து நின்னு "ஹேய் நா தனி ஆள் இல்ல"னு சொல்லும் போது எங்களுக்கு ரொம்ப பாவமா இருக்கும், ஏன் இந்தாளு இம்பூட்டு கஸ்டபடிறாப்லனு உச்சு கொட்டுவோம். அஜித்குமாரு நடித்த சண்டை காட்சிகளை கூர்ந்து பாருங்கள், ரொம்ப கஷ்டப்பட்டு எதிரிய அடிப்பாரு, கண்ண ஒருமாதிரியா மூடிகிட்டு, முகமும் லைட்டா அழுகுற மாதிரி இருக்கும். அவரு மாதவன் மாதிரி சாப்ட் ஹிரோ ரோல் பண்ணலாம். ஒரு 100 அஜித்குமாரு ரசிகர்களை சேரில் கட்டி போட்டு அவர் நடித்த ராஜா படத்தை போட்டு காட்டினால் அவர்கள் கதறி அழுவதை நீங்கள் தடுத்து நிறுத்தமுடியாது. "காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்" அந்த பாட்டின் ஊடால வெள்ளை-மஞ்சள் உடையில் அஜித்குமாரு ஜோவிடம் ஒரு ரியாக்சன் காட்டுவாரு பாருங்க...ம்ம்ம் முடியாது !!

ஒருத்தன் படம் பார்க்க வந்தா அவனுக்கு தேவை ஒரு 3 மணி நேர பொழுதுபோக்கு, 5 பாட்டு 4 ஃபைட்டு கொஞ்சம் காமடி இருந்த தேவல... இத ஒழுங்கா பண்ணது எம் ஜி ஆர், ரஜினி, விஜய். சிவாஜி நடிப்பை உலகமே ரசிக்குது ஆனா அவரு படத்துல போட்ட சண்டைய
பாக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும், ரொம்ப சிரமப்பட்டு கால தூக்கி எதிரிய எத்துவாப்ல, ஆனா அதே எதிரிய அவர் புருவத்த தூக்கி மிரட்டும் போது ரொம்பவே ரசிக்கலாம். ஆனா மக்கள் திலகம் ரொம்ப ஃபிட்டா இருந்து, அதிரடியா சண்டை போடுறத ரசிக்கலாம். கமலும் பல ஆக்சன் படங்கள் பண்ணியிருந்தாலும் ரஜினியின் பத்தவச்ச சிகரட் முன்னால கமலின் பீடி அணைந்துவிட்டது.நடிப்பில் கமலை நெருங்கமுடியாது என்பதும் உன்மைதான்.

விஜய் படம்னா எல்லா பாட்டும் ஹிட்டு, ரெண்டு தெருக்கு அங்கிட்டு விஜய் பாட்டு ஓடினாலும் அது எந்த படப்பாடல்னு சொல்லிடலாம். அதேபோல சண்டை காட்சியில் விஜய் காட்டும் ஆக்ரோசம் கடிமையா இருக்கும். நல்ல தெளிவான குரல். உதாரணம்:- தமிழன் கிளைமாக்ஸ் - சிட்டிசன் கிளைமாக்ஸ் (கோர்ட் சீன்).

சூர்யா பார்க்க அழகு, ஆரம்பகால படத்துல நடிப்ப கை கக்கத்துல வச்சு புளிஞ்சிருப்பாப்டி.
விக்ரமன் தோண்டிய குழியில், முதல் பாடல்ல ரொம்ப குனிஞ்சு கேமராவ பாத்து கடமைக்கு சிரிச்சுகிட்டு பாவம் போல ஆடுவாப்ல. பாலா உதவில எழுந்துட்டாரு. அடுத்த கமல் நாந்தான் என்கிற அரிப்பு அதிகம் இவருக்கு. சமீபத்திய ஆதவன் மிக கொடுமைனு பலர் சொல்ல கேட்டேன்.

விக்ரம் இப்போ அதள பாதளத்தை நோக்கி பயணிச்சுகிட்டு இருக்கார். லிங்குசாமி பீமானு டைட்டில சொன்னதும் விக்ரம் ரொம்பவே மகிழ்ச்சியா ஒத்துகொண்டாராம், இத அவரே ஒரு டீ.வி.ல சொன்னாரு.

சிம்பு - தனுஷ், இவங்க ரெண்டு பேர்ல தனுஷ் மட்டும் தேறுவாரு, சிம்புக்கு வாய் அவங்க அப்பாவ விட 2 இன்ச் கூட, அதனாலயே திறமையிருந்தும் நம்மக்கள் ஏத்துக்க மாட்றாங்க.

இதுனால என்ன விஜய் ரசிகன்னு நினைக்க வேணாம், நமக்கு எப்போதும் தலைவன் ரஜினிதான் !!

பி.கு:- வில்லு படம் வெளியானதும் நான் என் நண்பர்களுக்காக சின்னதா ஒரு விமர்சனம் எழுது அனுப்பினேன். அடுத்த பதிவில் அது காணகிடைக்கும்.