எனக்கு தெரிந்தவரையில் இணையதளத்தில் அஜித்குமாருக்குத்தான் நிறைய விசிறிகள்.
ஆனால் உன்மை நிலவரம் என்னானு தெரில.... ஒரு விஜய் படம் வெளிவந்தா அது குறைந்தபட்ச்சம் அவரது ரசிகர்களையாவது திருப்திபடுத்தும். விஜய் படம் ஓடும் அரங்கில் சென்று பார்த்தால் தெரியும், குறைந்தது 1 வாரத்திற்காவது திருவிழா கோலத்துடனிருக்கும்.
சில அஜித்குமாரு படத்தை அவரது ரசிகர்கள் கூட இரண்டாவது முறை போக தயங்குவதை பார்த்திருக்கிறேன், உதாரணம்:- ஆஞ்சனேயா, ரெட், ராஜா, ஏகன், திருப்பதி, ஆழ்வார் (இந்த படப் பெயர் மறந்து போய் கூகுலில் தேடினேன்), பரமசிவன். அஜித்குமாருக்கு அமூல் பேபி முகம், குரலும் மிக மென்மையா இருக்கும். இதவச்சுகிட்டு அவரு தூங்கி எழுந்த கண்களுடன் வந்து நின்னு "ஹேய் நா தனி ஆள் இல்ல"னு சொல்லும் போது எங்களுக்கு ரொம்ப பாவமா இருக்கும், ஏன் இந்தாளு இம்பூட்டு கஸ்டபடிறாப்லனு உச்சு கொட்டுவோம். அஜித்குமாரு நடித்த சண்டை காட்சிகளை கூர்ந்து பாருங்கள், ரொம்ப கஷ்டப்பட்டு எதிரிய அடிப்பாரு, கண்ண ஒருமாதிரியா மூடிகிட்டு, முகமும் லைட்டா அழுகுற மாதிரி இருக்கும். அவரு மாதவன் மாதிரி சாப்ட் ஹிரோ ரோல் பண்ணலாம். ஒரு 100 அஜித்குமாரு ரசிகர்களை சேரில் கட்டி போட்டு அவர் நடித்த ராஜா படத்தை போட்டு காட்டினால் அவர்கள் கதறி அழுவதை நீங்கள் தடுத்து நிறுத்தமுடியாது. "காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்" அந்த பாட்டின் ஊடால வெள்ளை-மஞ்சள் உடையில் அஜித்குமாரு ஜோவிடம் ஒரு ரியாக்சன் காட்டுவாரு பாருங்க...ம்ம்ம் முடியாது !!
ஒருத்தன் படம் பார்க்க வந்தா அவனுக்கு தேவை ஒரு 3 மணி நேர பொழுதுபோக்கு, 5 பாட்டு 4 ஃபைட்டு கொஞ்சம் காமடி இருந்த தேவல... இத ஒழுங்கா பண்ணது எம் ஜி ஆர், ரஜினி, விஜய். சிவாஜி நடிப்பை உலகமே ரசிக்குது ஆனா அவரு படத்துல போட்ட சண்டைய
பாக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும், ரொம்ப சிரமப்பட்டு கால தூக்கி எதிரிய எத்துவாப்ல, ஆனா அதே எதிரிய அவர் புருவத்த தூக்கி மிரட்டும் போது ரொம்பவே ரசிக்கலாம். ஆனா மக்கள் திலகம் ரொம்ப ஃபிட்டா இருந்து, அதிரடியா சண்டை போடுறத ரசிக்கலாம். கமலும் பல ஆக்சன் படங்கள் பண்ணியிருந்தாலும் ரஜினியின் பத்தவச்ச சிகரட் முன்னால கமலின் பீடி அணைந்துவிட்டது.நடிப்பில் கமலை நெருங்கமுடியாது என்பதும் உன்மைதான்.
விஜய் படம்னா எல்லா பாட்டும் ஹிட்டு, ரெண்டு தெருக்கு அங்கிட்டு விஜய் பாட்டு ஓடினாலும் அது எந்த படப்பாடல்னு சொல்லிடலாம். அதேபோல சண்டை காட்சியில் விஜய் காட்டும் ஆக்ரோசம் கடிமையா இருக்கும். நல்ல தெளிவான குரல். உதாரணம்:- தமிழன் கிளைமாக்ஸ் - சிட்டிசன் கிளைமாக்ஸ் (கோர்ட் சீன்).
சூர்யா பார்க்க அழகு, ஆரம்பகால படத்துல நடிப்ப கை கக்கத்துல வச்சு புளிஞ்சிருப்பாப்டி.
விக்ரமன் தோண்டிய குழியில், முதல் பாடல்ல ரொம்ப குனிஞ்சு கேமராவ பாத்து கடமைக்கு சிரிச்சுகிட்டு பாவம் போல ஆடுவாப்ல. பாலா உதவில எழுந்துட்டாரு. அடுத்த கமல் நாந்தான் என்கிற அரிப்பு அதிகம் இவருக்கு. சமீபத்திய ஆதவன் மிக கொடுமைனு பலர் சொல்ல கேட்டேன்.
விக்ரம் இப்போ அதள பாதளத்தை நோக்கி பயணிச்சுகிட்டு இருக்கார். லிங்குசாமி பீமானு டைட்டில சொன்னதும் விக்ரம் ரொம்பவே மகிழ்ச்சியா ஒத்துகொண்டாராம், இத அவரே ஒரு டீ.வி.ல சொன்னாரு.
சிம்பு - தனுஷ், இவங்க ரெண்டு பேர்ல தனுஷ் மட்டும் தேறுவாரு, சிம்புக்கு வாய் அவங்க அப்பாவ விட 2 இன்ச் கூட, அதனாலயே திறமையிருந்தும் நம்மக்கள் ஏத்துக்க மாட்றாங்க.
இதுனால என்ன விஜய் ரசிகன்னு நினைக்க வேணாம், நமக்கு எப்போதும் தலைவன் ரஜினிதான் !!
பி.கு:- வில்லு படம் வெளியானதும் நான் என் நண்பர்களுக்காக சின்னதா ஒரு விமர்சனம் எழுது அனுப்பினேன். அடுத்த பதிவில் அது காணகிடைக்கும்.
போடா பச்சிலை புடிங்கி
Tuesday, December 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)


உதாரணம்:- தமிழன் கிளைமாக்ஸ் - சிட்டிசன் கிளைமாக்ஸ் (கோர்ட் சீன்).
ReplyDeleteவிஜய் பற்றிய பத்தியில் அஜித்தின் படம். ஒப்பிடுவதற்காகவா ?
aamanga
ReplyDelete